மகளை கர்ப்பமாக்கிய தந்தை : போக்சோவில் சிறையில் அடைத்த போலீஸ்!!

 

மகளை கர்ப்பமாக்கிய தந்தை :  போக்சோவில் சிறையில் அடைத்த போலீஸ்!!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே குன்னத்தூர் மதுரை அகஸ்தியன்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் -ராஜேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகளும் உள்ளனர். கூலி வேலை பார்த்து வரும் கன்னியப்பன் கொரோனா ஊரடங்கின் போது தனது மகளிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பம் அடைந்ததாக தெரிகிறது.

மகளை கர்ப்பமாக்கிய தந்தை :  போக்சோவில் சிறையில் அடைத்த போலீஸ்!!

குன்னத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வரும் அந்த மாணவி, மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதால் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் கர்ப்பமாக இருப்பது பள்ளி நிர்வாகத்துக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் அந்த மாணவியை பரிசோதனை செய்ததில் அவர் 8 மாதம் கர்ப்பமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது . இதுகுறித்து சமூக நலத் துறைக்கு புகார் அளித்த நிலையில் அவர்கள் விசாரணை செய்ததில், அந்த மாணவி தந்தை மூலமாக கர்ப்பமானது கண்டுபிடிக்கப்பட்டது.

மகளை கர்ப்பமாக்கிய தந்தை :  போக்சோவில் சிறையில் அடைத்த போலீஸ்!!

இதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட 9ஆம் வகுப்பு மாணவியின் பாட்டி லட்சுமி ஆரணி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அந்த மாணவியின் தந்தை கண்ணியப்பன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட கண்ணியப்பன் ஆரணி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.