‘டி.எஸ்.பி. ஆன மகளுக்கு இன்ஸ்பெக்டர் தந்தை சல்யூட்’ – நெகிழ்ச்சி சம்பவம்!

 

‘டி.எஸ்.பி. ஆன மகளுக்கு இன்ஸ்பெக்டர் தந்தை சல்யூட்’ – நெகிழ்ச்சி சம்பவம்!

ஆந்திரா அருகே டி.எஸ்.பி ஆன மகளுக்கு இஸ்பெக்டராக பணியாற்றி வரும் தந்தை சல்யூட் அடித்த போட்டோ இணையத்தை கலக்கி வருகிறது.

ஆந்திரா காவல்துறையில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் ஒய் ஷியாம் சுந்தர். இவரது மகள் ஒய் ஜெஸ்ஸி பிரசாந்திக்கு சிறிய வயதில் இருந்தே போலீஸ் ஆக வேண்டும் என்ற கனவு இருந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு அந்த கனவு நிறைவேறியுள்ளது. அந்த ஆண்டு நடந்த காவலர் தேர்வில் வெற்றி பெற்ற பிரசாந்தி, டி.எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். பணி அடிப்படையில் தந்தையை விட, உயர் பதவியில் பிரசாந்தி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

‘டி.எஸ்.பி. ஆன மகளுக்கு இன்ஸ்பெக்டர் தந்தை சல்யூட்’ – நெகிழ்ச்சி சம்பவம்!

இந்த நிலையில், நேற்று ஜெஸ்ஸி பிரசாந்தி திருப்பதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக வந்துள்ளார். டி.எஸ்.பியாக ஜெஸ்ஸி வருவதை பார்த்த ஷியாம் சுந்தர், ஜெஸ்ஸிக்கு சல்யூட் அடித்து வரவேற்பு அளித்திருக்கிறார். பணியின் அடிப்படையில், தந்தை மகளுக்கு சல்யூட் அடித்து வரவேற்பு அளித்தது காண்போரை நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

இது குறித்து பேசிய ஷியாம் சுந்தர், “பணியில் என்னை விட உயர்ந்தவரான எனது மகளுக்கு சல்யூட் அடிப்பதில் எனக்கு பெருமிதம். வீட்டில் தான் அப்பா மகள் உறவு எல்லாம். பணியிடத்தில் இது எனது கடமை” என்று பெருமிதத்துடன் கூறியுள்ளார். தந்தையே எனக்கு சல்யூட் அடித்தது பெருமையான நிகழ்வு என்று ஜெஸ்ஸியும் கூறியுள்ளார்.