பூர்வீக சொத்து பிரிப்பதில் தந்தை-மகன் தகராறு. மகனின் கையை வெட்டிய தந்தை!

 

பூர்வீக சொத்து பிரிப்பதில் தந்தை-மகன் தகராறு. மகனின் கையை வெட்டிய தந்தை!

நாமக்கல்

பூர்வீக சொத்து பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் மகனின் கையை தந்தையே வெட்டிய சம்பவம் நாமக்கலில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த நாரைக்கிணறு அருகே சூரக்கோட்டை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பண்ணன் (45) கூலி தொழிலாளி. இவரது மகன் மணிவண்ணன் (28).

பூர்வீக சொத்து பிரிப்பதில் தந்தை-மகன் தகராறு. மகனின் கையை வெட்டிய தந்தை!


இருவருக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக, கடந்த 6 மாதங்களுக்கு முன் பிரிந்த அவர்கள், தங்களது விவசாய நிலத்தில் தனி தனியாக விவசாயம் செய்து வருகின்றனர். இந்த நிலையில், பூர்வீக நிலத்தை பங்கிடுவதில் தந்தைக்கும் மகனுக்கும் மோதல் ஏற்பட்டு வந்துள்ளது.

பூர்வீக சொத்து பிரிப்பதில் தந்தை-மகன் தகராறு. மகனின் கையை வெட்டிய தந்தை!

இந்த நிலையில், இருவருக்கும் வாய் தகராறு முற்றியதில், கருப்பண்ணன் அரிவாளால் வெட்டியதில், மணிவண்ணனின் இடது கையில் கடும் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து, இரத்த வெள்ளத்துடன் ராசிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து ஆயில்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சொத்து தகராறில் சொந்த மகனையே தந்தை வெட்டிய சம்பவம் நாமக்கலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.