மதுரையில் கடன் தொல்லையால் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை!

 

மதுரையில் கடன் தொல்லையால் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை!

மதுரையில் கடன் தொல்லையால் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்த தந்தை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை செல்லூர் அஹிம்சாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவருக்கு சிவனேஷ் என்ற மூன்று வயதில் மகனும், ரித்திகா என்ற இரண்டு வயதில் மகளும் உள்ளனர். இவருக்கு 5 லட்சம் ரூபாய் கடன் உள்ளதால் கடன் பிரச்சனை தொடர்பாக அவரது மனைவி அபிநயாவிடையே தகராறு ஏற்பட்டதால் மனைவி தாய் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது.

மதுரையில் கடன் தொல்லையால் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை!

இதனால் மனமுடைந்த ஜெயச்சந்திரன் தன்னுடைய இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் இரண்டாவது மகள் ரித்திகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தந்தை மற்றும் மகன் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தந்தை மீது கொலை வழக்குப் பதிவு செய்த செல்லூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.