விவசாய நிலத்தில் இருந்த மின்வேலியில் சிக்கி தந்தை- மகன் பலி!

 

விவசாய நிலத்தில் இருந்த மின்வேலியில் சிக்கி தந்தை- மகன் பலி!

ராணிப்பேட்டை

அரக்கோணம் அருகே விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக அமைப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ராமலிங்கம்புரம் பகுதியை சேர்ந்தவர் பாக்யராஜ். இவரது மகன் அருண்குமார்(14). இவர் அரசுப் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தார். பாக்யராஜூக்கு, அரக்கோணம் அடுத்த கஞ்சாம்பட்டு கிராமத்தில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. பாக்யராஜ் நிலத்தை அடிக்கடி சென்று பார்வையிட்டு வருவது வழக்கம்.

விவசாய நிலத்தில் இருந்த மின்வேலியில் சிக்கி தந்தை- மகன் பலி!

இந்த நிலையில், இன்று காலை பாக்யராஜ், தனது மகன் அருண்கு மாரை அழைத்துக்கொண்டு விவசாய நிலத்திற்கு சென்றார். அப்போது, செல்வம் என்பருடைய நிலத்தின் வழியாக சென்றபோது, அங்கு காட்டுப்பன்றிகளை தடுக்க அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் இருவரும் சிக்கிக் கொண்டனர். இதில் மின்சாரம் தாக்கி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் சடலங்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, சட்ட விரோதமாக மின்வேலி அமைத்த செல்வத்தை தேடி வருகின்றனர்.