சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது

 

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது

தேனி

பெரியகுளத்தில் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த, தாயின் இரண்டாவது கணவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தேனி மாவட்டம் போடி நாயக்கனூர் அடுத்த சீன்னூர்காலனி பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி சுருளி. இவர் அதேபகுதியை சேர்ந்த கணவரை பிரிந்த மாரியம்மாள் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வருகிறார். மாரியம்மாளுக்கு, முதல் கணவருக்கு பிறந்த 14 வயது மகள் உள்ளார். இதனிடையே, சுருளி தனது குடும்பத்துடன் பெரியகுளம் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் தங்கியிருந்து கூலி வேலை செய்து வந்தார்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தை போக்சோ சட்டத்தில் கைது

இந்த நிலையில் வீட்டில் மாரியம்மாள் இல்லாதபோது, அவரது மகளை மிரட்டி சுருளி பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தெரிவித்த தகவலின் பேரில், மாரியம்மாள் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் சுருளியின் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். தொடர்ந்து, அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.