ஆசிட் வாங்கிய கணவன் -அருகே சென்ற மனைவி -ஆண் குழந்தைக்காக நடந்த நாச வேலை .

 

ஆசிட் வாங்கிய கணவன் -அருகே சென்ற மனைவி -ஆண் குழந்தைக்காக நடந்த நாச வேலை .

தனது மனைவி ஆண் குழந்தை பெற்று கொடுக்காத கோவத்தில் ஒரு கணவர் அவரின் மனைவி மீது ஆசிட் வீசி கொல்ல முயன்றார் .

ஆசிட் வாங்கிய கணவன் -அருகே சென்ற மனைவி -ஆண் குழந்தைக்காக நடந்த நாச வேலை .


பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா மாவட்டத்தில் உள்ள நவுகாவன் கிராமத்தில் ஒரு சிறு விவசாயி வசித்து வந்தார் . அவர் தனது மனைவியை 2014 இல் திருமணம் செய்து கொண்டார்.இப்போது அந்த தம்பதியருக்கு ஆறு மற்றும் நான்கு வயதுடைய இரண்டு மகள்கள் உள்ளனர் .இந்நிலையில் அந்த கணவர் தன்னுடைய மனைவியிடம் ஆண் குழந்தை பிறக்கவில்லை என்று குறை கூறிக்கொண்டே இருந்தார் .இதனால் அந்த மனைவி மிகவும் மன வேதனையில் இருந்தார் .
அதனால் அவருக்கும் அவரின் மனைவிக்குமிடையே அடிக்கடி சண்டை வந்தது .இதன் எதிரொலியாக கடந்த செவ்வாய்க்கிழமை மாலை அந்த கணவர் நன்றாக மது அருந்தி விட்டு, ஓர் ஆசிட் பாட்டிலை வாங்கி வந்தார் .பின்னர் அவரின் மனைவி எதிரே வந்தபோது அந்த ஆசிடை எடுத்து அவரின் முகம் மற்றும் கழுத்தில் ஊற்றினார் .இந்த ஆசிட் வீச்சில் அந்த பெண்னின் 60 சதவீத உடல் தீயில் கருகியது .மேலும் அவரின் முகம் மற்றும் கழுத்து ஆகிய பகுதிகள் வெந்து போனது .இதனால் அவரை அந்த பகுதியில் வசிக்கும் பலர் அங்குள்ள ஒரு மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர் .அங்கு அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது .இந்நிலையில் மனைவி மீது ஆசிடை வீசிய அந்த கணவரை கைது செய்ய போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்

ஆசிட் வாங்கிய கணவன் -அருகே சென்ற மனைவி -ஆண் குழந்தைக்காக நடந்த நாச வேலை .