மதுபோதையில் தகராறு செய்த தந்தை வெட்டிக்கொலை – மகன் கைது!

 

மதுபோதையில் தகராறு செய்த தந்தை வெட்டிக்கொலை – மகன் கைது!

நாகை

நாகை அருகே தாயிடம் மதுபோதையில் தகராறு செய்த தந்தையை, மகன் வெட்டிக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாகை மாவட்டம் கீழ்வேளூர் அடுத்த இருக்கை பகுதியை சேர்ந்தவர் செய்யது முபாரக். இவர் அந்த பகுதியில் சூப் கடை வைத்து நடந்தி வந்துள்ளார். இவரது மனைவி ஹாஜிரம்மா. இவர்களது மகன் சதாம் உசேன். இந்த நிலையில், செய்யது முபாரக்கிற்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் மது அருந்தி விட்டு அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் மதுபோதையில் வீட்டிற்கு வந்த செய்யது முபாரக், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு உள்ளார்.

மதுபோதையில் தகராறு செய்த தந்தை வெட்டிக்கொலை – மகன் கைது!

அப்போது, மகன் சதாம் உசேன் அதனை தட்டிக்கேட்டுள்ளார். இதனால் தந்தை – மகன் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் கைகலப்பாக மாறி உள்ளது. இதில் ஆத்திரமடைந்த சதாம் உசேன், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து, தந்தையை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த செய்யது முபாரக்கை உறவினர்கள் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று காலை செய்யது முபாரக் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் கீழ்வேளுர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சதாம் உசேனை கைது செய்தனர். குடும்ப தகராறில் தந்தையை மகன் வெட்டிக்கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.