ஊர் சுற்றிய மகன் -தட்டிக்கேட்ட தந்தை -அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

 

ஊர் சுற்றிய மகன் -தட்டிக்கேட்ட தந்தை -அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

ஊர் சுற்றிவிட்டு நள்ளிரவில் வந்த மகனை, அவரின் தந்தை அடித்து கொன்றதால் கைது செய்யப்பட்டார்

ஊர் சுற்றிய மகன் -தட்டிக்கேட்ட தந்தை -அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்

பீகார் மலாஹிபக்டியின் சேரி பகுதியில் விஜய் லால் சவுத்ரி என்பவருக்கு ,நமன் என்ற மகனும்  12 வயதில்   மன்வி என்ற மகளும் இருக்கின்றனர் .அவர் தற்போது தன்னுடைய  மூன்றாவது மனைவியோடு வசிக்கிறார்  .அந்த இரண்டு குழந்தைகளும் எட்டு ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போன் இரண்டாவது மனைவியின் பிள்ளைகள் ஆவர் .ஆனால் அவரின் முதல் மனைவி அவரை பிரிந்து தனியே வசிக்கிறார் .

இந்நிலையில் விஜய்க்கும்  அவரின் மூன்றாவது மனைவிக்கும் அவரின் இரண்டு குழந்தைகளை பிடிக்காமல் போனது .அதனால் அந்த சிறுவன் என்ன செய்தாலும் அவனை அடித்து உதைத்து கொடுமை செய்துள்ளார் .மேலும் கடந்த வியாழக்கிழமையன்று அந்த நமன் என்ற சிறுவன் தன்னுடைய நண்பர்களோடு வெளியே போய் விட்டு நள்ளிரவில் வீடு திரும்பினார் .அதனால் கோபமுற்ற நமனின் தந்தை அவனை கட்டி வைத்து அடித்து கொலை செய்து விட்டார் .

மறுநாள் அவரின் சகோதரி மன்வி தன்னுடைய சகோதரன் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியுற்று அக்கம் பக்கத்திலுள்ளவர்களிடம் கூறினார் .உடனே அக்கம்பக்கத்தினர் அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கூறினர் .போலீசார் விரைந்து வந்து ,அந்த சிறுவனின் பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர் .பின்னர் விசாரணை மேற்கொண்ட போது,அவரின் தந்தையே மகனை கொன்றதை கண்டுபிடித்து அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர் .

ஊர் சுற்றிய மகன் -தட்டிக்கேட்ட தந்தை -அடுத்து நடந்த அதிர்ச்சி சம்பவம்