“இந்த நேரத்துல குழந்தை அழுது இம்சை பண்ணுதே ” – கணவன் செஞ்ச வேலையால் மனைவி அதிர்ச்சி.

 

“இந்த நேரத்துல குழந்தை அழுது இம்சை பண்ணுதே ” –  கணவன் செஞ்ச வேலையால் மனைவி அதிர்ச்சி.

ஒரு குடிகார கணவன் குடிபோதையில் தன்னுடைய 20 மாத குழந்தையை சுவற்றில் அடித்து கொலை செய்ததால் கைது செய்யப்பட்டார் .

“இந்த நேரத்துல குழந்தை அழுது இம்சை பண்ணுதே ” –  கணவன் செஞ்ச வேலையால் மனைவி அதிர்ச்சி.

மகாராஷ்டிராவின் மும்பைக்கருகே கோண்டியா மாவட்டத்தில் லோனாரா கிராமத்தில் வசிக்கும் விவேக் யுகே என்ற 28 வயதான நபருக்கு 2018ம் ஆண்டு திருமணம் நடந்தது .அதன் பிறகு அவருக்கு குடிப்பழக்கம் அதிகமானதால் அவரின் மனைவி  அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார் .பின்னர்  அவருக்கு ஒரு குழந்தை பிறந்ததும் மீண்டும் குடிக்க மாட்டேன் என்று கணவன்  கூறியதால் அவரோடு குழந்தையுடன் வசிக்க வந்தார்.

ஆனால் அந்த கணவன் விவேக் திருந்தாமல் மீண்டும் குடிக்கு அடிமையானார் .அதனால் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து கொடுமை செய்துள்ளார் .

இந்நிலையில் கடந்த வாரம் அந்த கணவர் குடித்து விட்டு தூங்கிக்கொண்டிருந்தார் .அப்போது அவரின் குழந்தை அழுததை பார்த்து அவர் கோவப்பட்டு கத்தினார்  .அப்போது அந்த மனைவி அவரின் கணவரிடம் ஐந்து ரூபாய் கேட்டார் .அதற்கு அந்த கணவர் எதற்கு காசு கேட்கிறாய்என்று கேட்டார் .அதற்கு அந்த மனைவி, ‘அழும்  குழந்தைக்கு  பிஸ்கட் வாங்கி தருவதற்குஎன்று கூறினார் .

அப்போது அந்த கணவர் நன்றாக  குடித்திருந்ததாலும் , காசு இல்லாத காரணத்தாலும் அந்த 20மாத குழந்தையை சுவற்றில் அடித்து காயப்படுத்தினார் .பின்னர் கதவில் அடித்து கொடுமை செய்தார் .இதனால் அந்த குழந்தை அந்த இடத்திலேயே இறந்து போனது .பின்னர்  இந்த கொலை பற்றி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது .விரைந்து வந்த போலீசார்,சம்பவ இடத்திற்கு வந்து அந்த குழந்தையின் சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார்கள் .அதன் பிறகு அவரின் குழந்தையை  கொன்ற அந்த தந்தை விவேக்கை கைது செய்தார்கள் .

“இந்த நேரத்துல குழந்தை அழுது இம்சை பண்ணுதே ” –  கணவன் செஞ்ச வேலையால் மனைவி அதிர்ச்சி.