கொலையில் முடிந்த காதல் திருமணம் -மகளை தந்தையே கொன்ற கொடூரம் ..

 

கொலையில் முடிந்த காதல் திருமணம் -மகளை தந்தையே கொன்ற கொடூரம் ..

காதலனை திருமணம் செய்து கொண்ட ஒரு சிறுமியை அவரின் தந்தையே கொலை செய்துள்ள சம்பவம் ஜார்கண்டில் பரபரப்பை உண்டு பண்ணியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் பஹ்ரைச் மாவட்டத்தில் சுபாஷ் என்பவர், ஜூன் 20 ம் தேதி அவரின் 17 வயது மகள் தனது காதலரான சோட்காவுக்கு எதிராக வாக்குமூலம் பதிவு செய்ய விரும்பாததால் மகளின் தொண்டையை அறுத்து கொலை செய்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொலையில் முடிந்த காதல் திருமணம் -மகளை தந்தையே கொன்ற கொடூரம் ..
சுபாஷின் 17 வயது மகள் அதே ஊரை சேர்ந்த இப்ராஹிம் என்பவரின் மகன் சோட்காவை காதலித்து தந்தையின் எதிர்ப்பை மீறி திருமணம் புரிந்துள்ளார் .பிறகு அவர் மைனர் என்பதால் அவர் தந்தை கொடுத்த புகாரின் பேரில் இருவரையும் பிரித்து, சுபாஷ் மகளை தன்னோடு வீட்டில் வைத்துக்கொண்டுள்ளார் .காதலன் சோட்காவை போலீசார் குழந்தை திருமண சட்டப்படி கைது செய்துள்ளார்கள்.
இதற்கிடையில் அவரின் தந்தை சுபாஷ் காதலனை மறந்து விடும்படியும் அவருக்கெதிராக வாக்குமூலம் தரச்சொல்லியும் மகளை கொடுமை படுத்தியுள்ளார் ,மகள் தன் காதலன் சோட்காவுக்கெதிராக வாக்குமூலம் தராததால் சுபாஷ் மகளை கொன்றுள்ளார் .இதற்கிடையில் இப்ராஹிம் மீது அவர்தான் தன் மகளை கொன்றதாக சுபாஷ் அவர் மீது புகார் கொடுத்துள்ளார். போலீசார் இந்த கொலை வழக்கு பற்றி தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள்.