ஆம்லெட்டில் விஷம் வைத்து மகளை கொன்ற தந்தை! புதுக்கோட்டையில் நேர்ந்த சோகம்!

 

ஆம்லெட்டில் விஷம் வைத்து மகளை கொன்ற தந்தை!  புதுக்கோட்டையில் நேர்ந்த சோகம்!

ஆம்லெட்டில் விஷம் கலந்து கொடுத்து மாற்றுத்திறனாளி மகளை கொன்றுவிட்டு தந்தை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆம்லெட்டில் விஷம் வைத்து மகளை கொன்ற தந்தை!  புதுக்கோட்டையில் நேர்ந்த சோகம்!

புதுக்கோட்டை அருகே செல்லைய்யா என்பவர் தனது மாற்றுத்திறனாளி மகளுடன் வசித்து வந்துள்ளார். 70 வயதான செல்லைய்யா அன்றாட வாழ்வாதாரத்துக்கே கஷ்டபட்டு வந்த நிலையில் 40 வயதான மகள் சாந்திக்கு திருமணம் செய்து வைக்க முடியவில்லை என வருந்தி வந்துள்ளார்.

ஆம்லெட்டில் விஷம் வைத்து மகளை கொன்ற தந்தை!  புதுக்கோட்டையில் நேர்ந்த சோகம்!

இந்நிலையில் மகள் சாந்திக்கு ஆம்லெட்டில் விஷம் வைத்து கொடுத்து கொன்ற தந்தை செல்லைய்யா தானும் தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுக்க சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் இருவரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.