மதுவாங்க பணம் கேட்டு தொல்லை… போதையில் மகனை வெட்டிக்கொன்ற தந்தை…

 

மதுவாங்க பணம் கேட்டு தொல்லை… போதையில் மகனை வெட்டிக்கொன்ற தந்தை…

சேலம்

சேலம் அருகே மது அருந்த பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்த மகனை வெட்டிக்கொலை செய்த தந்தையை போலீசார் கைதுசெய்தனர்.

சேலம் மாவட்டம் நங்கவள்ளி அருகே உள்ள எல்லைகுட்டையூரை சேர்ந்தவர்கள் மணி – மாது தம்பதியினர். இவர்களது மகன் கலையரசன் (38). இவருக்கு திருமணமாகி இளமதி என்ற மனைவியும், 3 பெண் குழந்தைகளும் உள்ளனர். குடும்ப தகராறு காரணமாக இளமதி கணவரை பிரிந்து, பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறர்.

இதேபோல், மணியுடன் ஏற்பட்ட தகராறில், அவரது மனைவியும் பிரிந்து சென்றுவிட்டார். இதனால், மணி மற்றும் கலையரசன் ஆகியோர் மட்டும் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவருக்கும் மதுப்பழக்கம் உள்ள நிலையில், மதுகுடித்து விட்டு அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

மதுவாங்க பணம் கேட்டு தொல்லை… போதையில் மகனை வெட்டிக்கொன்ற தந்தை…

இந்த நிலையில், நேற்று முன்தினம் கலையரசன் மது அருந்த பணம் கேட்டு உள்ளார். அதற்கு மணி மறுத்து விட்டதால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதனை அடுத்து, வெளியே சென்ற மணி, இரவு 10 மணி அளவில் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது, படுத்து தூங்கி கொண்டிருந்த கலையரசனை அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.

இதில் கழுத்து பகுதியில் படுகாயமடைந்த கலையரசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். தகவல் அறிந்த நங்கவள்ளி போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, கொலையாளி மணியை கைது செய்தனர்.