மதுபோதையில் தகராறு செய்த மகன் வெட்டிக்கொலை – தந்தை கைது

 

மதுபோதையில் தகராறு செய்த மகன் வெட்டிக்கொலை – தந்தை கைது

கிருஷ்ணகிரி

ஓசூர் அருகே மதுபோதையில் தகராறு செய்த மகனை வெட்டிக்கொன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தாலுகா அச்செட்டிப்பள்ளி அருகேலாபயுள்ள எடப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் எல்லப்பா. கூலி தொழிலாளி. இவரது மனைவி மாதம்மாள் (45). இவர்களது மகன் மஞ்சுநாத் (27). மதுப்பழக்கத்திற் அடிமையான மஞ்சுநாத், அடிக்கடி மது அருந்திவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்த வந்துள்ளார்.

மதுபோதையில் தகராறு செய்த மகன் வெட்டிக்கொலை – தந்தை கைது

இதனை கண்டித்ததால் எல்லப்பாவுக்கும் – மஞ்சுநாத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மதுபோதையில் வீட்டிற்கு வந்த மஞ்சுநாத், பெற்றோருடன் தகராறில் ஈடுபட்டு உள்ளார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றியதால் ஆத்திரமடைந்த மஞ்சுநாத், அரிவாளை எடுத்து தந்தையை வெட்ட முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது, மஞ்சுநாத்திடம் இருந்த அரிவாளை பிடிங்கிய எல்லப்பா, அவரை சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த மஞ்சுநாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவல் அறிந்த மத்திகிரி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து எல்லப்பாவை கைதுசெய்தனர்.