‘கழிவுநீர் தொட்டியில் கிடந்த சடலம்’ : மாற்றுத்திறனாளி மகனை கொடூரமாக கொன்ற தந்தை கைது!

 

‘கழிவுநீர் தொட்டியில் கிடந்த சடலம்’ : மாற்றுத்திறனாளி மகனை கொடூரமாக கொன்ற தந்தை கைது!

திருச்சி மாவட்டம், பிள்ளாபாளையம் ஊராட்சியை சேர்ந்த தம்பதி தங்கவேல்(52) – செல்வராணி. இவர்களுக்கு கோபி என்ற மகனும் ஒரு மகளும் இருந்தனர். கடந்த 9 வருடங்களுக்கு முன்னர் விபத்தில் சிக்கி கை கால்கள் இழந்த நிலையில் கோபி மாற்றுத்திறனாளியாக இருந்து வந்துள்ளார். அவருக்கு தேவையான பணிகள் எல்லாத்தையும் செல்வராணி கவனித்துக் கொண்டு வந்துள்ளார்.

‘கழிவுநீர் தொட்டியில் கிடந்த சடலம்’ : மாற்றுத்திறனாளி மகனை கொடூரமாக கொன்ற தந்தை கைது!

இந்த நிலையில், கடந்த 10 நாட்களுக்கு முன்னர் குடும்பத் தகராறில் செல்வராணி வீட்டை விட்டு வெளியேறியதால் கோபியை கவனிக்க வேண்டிய நிர்பந்தத்தில் தங்கவேல் இருந்துள்ளார். கோபமடைந்த தங்கவேல், கோபியின் கழுத்தை அறுத்து வீட்டின் பின்புறத்தில் இருக்கும் கழிவுநீர்த் தொட்டியில் அவரை போட்டு மூடியுள்ளார். தொட்டி லேசாக திறந்திருப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர், தொட்டியை திறந்து பார்த்ததில் அதில் கோபி சடலம் கிடந்துள்ளது.

‘கழிவுநீர் தொட்டியில் கிடந்த சடலம்’ : மாற்றுத்திறனாளி மகனை கொடூரமாக கொன்ற தந்தை கைது!

அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீசாருக்கு அளித்த தகவலின் பேரில், தங்கவேலுவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, தன் மனைவி இல்லாததால் தான் பராமரித்து வந்ததாகவும் தனக்கு பிறகு யார் அவரை பார்த்துக் கொள்வார்கள் என்று எண்ணி கொலை செய்ததாக தங்கவேலு வாக்குமூலம் அளித்துள்ளார். மாற்றுத் திறனாளி மகனை தந்தையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.