‘மது போதையில் மகளை டார்ச்சர்’ : மருமகனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த மாமனார்!

 

‘மது போதையில் மகளை டார்ச்சர்’ : மருமகனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த மாமனார்!

பரமக்குடி அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்டு வந்த மருமகனை மாமனாரே வெட்டிக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள கேணிக்கரை பகுதியில் வசித்து வருபவர் நாகநாதன். இவர் சங்கீதா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். இந்த தம்பதிக்கு 2 குழந்தைகளும் இருக்கின்றன. குடிப்பழக்கத்திற்கு அடிமையான நாகநாதன் குடித்துவிட்டு மனைவி மற்றும் பிள்ளைகளை துன்புறுத்துவதை வாடிக்கையாக வைத்து இருந்துள்ளார். இதனால் சங்கீதாவின் தந்தை கருப்பையா, தனது மகளையும் பேரப் பிள்ளைகளையும் கவனித்து வந்ததாக தெரிகிறது.

‘மது போதையில் மகளை டார்ச்சர்’ : மருமகனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த மாமனார்!

மது பழக்கத்திலிருந்து நாகநாதன் மீட்டுக் கொண்டுவர கருப்பையா பல முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். ஆனால், அதற்கு நாகநாதன் இணங்கவில்லையாம். ஒரு கட்டத்தில் தனது மகள் துன்பப்படுவதை கண்டு மனம் பொறுக்காத கருப்பையா, எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் நாகநாதனுக்கு எதிராக புகார் அளித்துள்ளார். இதை அறிந்த நாகநாதன் மீண்டும் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் தகராறு செய்திருக்கிறார்.

‘மது போதையில் மகளை டார்ச்சர்’ : மருமகனை சரமாரியாக வெட்டிக் கொலை செய்த மாமனார்!

கோபத்தின் உச்சகட்டத்திற்கு சென்ற கருப்பையா, வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தனது மருமகனை சரமாரியாக வெட்டி கொலை செய்திருக்கிறார். மேலும், தான் தன் மருமகனை கொலை செய்து விட்டதாகக் கூறி எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.