ராஜஸ்தான்: மகனின் திருமணத்துக்கு கூட்டத்தை சேர்த்த தந்தைக்கு ரூ.6.26 லட்சம் அபராதம்!

 

ராஜஸ்தான்: மகனின் திருமணத்துக்கு கூட்டத்தை சேர்த்த தந்தைக்கு ரூ.6.26 லட்சம் அபராதம்!

ராஜஸ்தானில் மகனின் திருமணத்துக்கு கூட்டம் சேர்த்த தந்தைக்கு ரூ.6.26 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் பில்வாடா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய மகனுக்கு கடந்த ஜூன் 13ம் தேதி திருமணத்தை நடத்தியுள்ளார். இந்த திருமணத்துக்கு 50க்கும் மேற்பட்டோரை அவர் அழைத்துள்ளார். திருமண விழாவில் பங்கேற்றவர்களில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவர் உயிரிழந்துள்ளார். இதைத் தொடர்ந்து அந்த நபருக்கு மாவட்ட நிர்வாகம் 6,26,600 ரூபாய் அபராதம் விதித்துள்ளது. திருமண விழாவில் பங்கேற்ற 15 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது அப்பகுதியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது.