கொரோனாவால் மகன் இறந்த அதிர்ச்சியில், தந்தை உயிரிழப்பு!

 

கொரோனாவால் மகன் இறந்த அதிர்ச்சியில், தந்தை உயிரிழப்பு!

தேனி

ஆண்டிப்பட்டியில் கொரோனாவால் மகன் இறந்ததை அறிந்த தந்தை அதிர்ச்சியில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் துரைராஜ். ஓய்வுபெற்ற போக்குவரத்துக்கழக ஊழியர். இவர் தனது மனைவி காமாட்சி மற்றும் மகன் ராஜ்குமாருடன், தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி குமாரபுரம் பகுதியில் வசித்து வந்தார். தனியார் வங்கியில் பணிபுரிந்து ராஜ்குமாருக்கு, திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், ராஜ்குமாருக்கு கடந்த 6ஆம் தேதி கொரோனா தொற்று ஏற்பட்டது.

கொரோனாவால் மகன் இறந்த அதிர்ச்சியில், தந்தை உயிரிழப்பு!

இதனையடுத்து, அவர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துமனையில் சிகிச்சைககாக அனுமதிக்கப்பட்டார். அங்கு, தீவிர கிசிச்சை பிரிவில் இருந்து வந்த ராஜ்குமார், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் கேட்டு அதிர்ச்சியடைந்த துரைராஜ் மாரடைப்பால் திங்கள் கிழமை அதிகாலை உயிரிழந்தார்.மகனும், கணவரும் அடுத்தடுத்து உயிரிழந்தால் குடும்பத்தினர் செய்வதறியாது தவிப்புக்கு உள்ளாகினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் தன்னார்வலர்கள் உதவியுடன், துரைராஜ் உடலை அடக்கம் செய்தனர். மகன் இறந்த அதிர்ச்சியில் தந்தையும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.