செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்த தந்தை… வேதனையில் பள்ளி மாணவர் தற்கொலை!

 

செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்த தந்தை… வேதனையில் பள்ளி மாணவர் தற்கொலை!

மதுரை

மதுரையில் ஆன்லைனில் செல்போன் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால் மனமுடைந்த 5ஆம் வகுப்பு மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மதுரை மாநகர் முத்துப்பட்டி ஆர்.எம்.எஸ். காலனியில் வசித்து வருபவர் ரஞ்சித்குமார். தனியார் நிறுவன ஊழியர். இவரது 10 வயது மகன் ஜெயபிரசாத். இவர் தனியார் பள்ளியில் 5ஆம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளி திறக்காததால் ஆன்லைன் மூலம் வகுப்பில் பங்கேற்று வந்தார்.

செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்த தந்தை… வேதனையில் பள்ளி மாணவர் தற்கொலை!

இந்த நிலையில், ஜெயபிரசாத் படிப்பில் கவனம் செலுத்தாமல் அடிக்கடி செல்போனில் ஆன்லைன் கேம்களை விளையாடி வந்துள்ளார். இதனை அறிந்த ரஞ்சித்குமார், நேற்றிரவு ஜெயபிரசாத்தை கண்டித்து உள்ளார். இதனால் மனமுடைந்த சிறுவன், நேற்றிரவு தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். மகன் தூக்கில் தொங்கியதை கண்டு அவரது பெற்றோர் கதறி அழுதனர். இது பார்ப்போரை கண்கலங்க செய்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த சுப்ரமணியபுரம் போலீசார், சிறுவனின் உடலை கைப்பற்றி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும், தற்கெலை சம்பவம் குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்