தந்தையால் மகளுக்கு நடந்த கொடுமை!- வேலியே பயிரை மேய்ந்த சோகம்

 

தந்தையால் மகளுக்கு நடந்த கொடுமை!- வேலியே பயிரை மேய்ந்த சோகம்

வேலியே பயிரை மேய்ந்த கதையாக பெற்ற மகளையே தந்தை பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் வத்சலாபுரம் 3வது தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (36). அச்சக ஊழியரான இவர், குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். மனைவி இறந்துவிட்டதால் தனது 13 வயது மகளுடன் வசித்து வந்தார். ஆனால் இவரை பராமரித்து வந்தது அவரது பாட்டிதான். இவரது மகன் அதே பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் மூர்த்தி வேலை முடித்து விட்டு வீட்டிற்கு குடித்து விட்டு வருவது வழக்காக கொண்டுள்ளார். சம்பவத்தன்று இரவு மூர்த்தி குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, வீட்டில் தூங்கி கொண்டிருந்த மகளுக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தந்தையின் செயலால் சிறுமி அலறியுள்ளார். பின்னர் இது குறித்து தனது பாட்டியிடம் கூறி அழுத்துள்ளார்.

இதுகுறித்து சிறுமியின் பாட்டி திருநின்றவூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். வேலியே பயிரை மேய்ந்த கதையாக பெற்ற மகளையே தந்தை ஒருபர் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.