`தனிமையில் இருந்த மகள்; போதையில் பலாத்காரம் செய்த காமுகன்!’- கம்பி எண்ணும் பிள்ளையை கர்ப்பமாக்கிய தந்தை

 

`தனிமையில் இருந்த மகள்; போதையில் பலாத்காரம் செய்த காமுகன்!’- கம்பி எண்ணும் பிள்ளையை கர்ப்பமாக்கிய தந்தை

குடிபோதையில் பெற்ற மகளையே பாலியல் வன்கொடுமை செய்த தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகன் தற்போது 6 மாத கர்ப்பமாக இருப்பதுதான் வேதனையின் உச்சம்.

`தனிமையில் இருந்த மகள்; போதையில் பலாத்காரம் செய்த காமுகன்!’- கம்பி எண்ணும் பிள்ளையை கர்ப்பமாக்கிய தந்தை

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் சென்னம்பட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (45) இவர் தனது சகோதரிகள் இரண்டு பேரையும் திருமணம் செய்துள்ளார். இவர்கள் ஒவ்வொருவருக்கும் மகள்கள் உள்ளனர். புதூரில் கருப்பசாமி குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் 2-வது மனைவியின் 14 வயது மகள் உமாவுக்கு (பெயர் மாற்றம்) திடீரென வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, புதூர் அரசு மருத்துமனையில் உமாவுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மேல்சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உமா அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது, உமாவை மருத்துவர்கள் பரிசோதனை செய்தபோது 6 மாத கர்ப்பம் ஆக இருப்பது தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து உமாயின் தாய், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

`தனிமையில் இருந்த மகள்; போதையில் பலாத்காரம் செய்த காமுகன்!’- கம்பி எண்ணும் பிள்ளையை கர்ப்பமாக்கிய தந்தை

இதையடுத்து, உமாவிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். கடந்த ஆண்டு அரையாண்டு விடுமுறையில் வீட்டில் இருந்தேன். அப்போது, குடிபோதையில் வந்த எனது தந்தை கருப்பசாமி என்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார் . இதை வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார். பின்னர் தொடர்ந்து மிரட்டி என்னை பாலியல் வன்கொடுமை செய்தார்” என்று உமா வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில், தலைமறைவான கருப்பசாமி மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை காவல்துறையினர் தேடிவந்தனர். இந்த நிலையில், புதூர் பகுதியில் பதுங்கியிருந்த கருப்பசாமியை எட்டயபுரம் காவல்துறையினர் கைது செய்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

போதையில் பெற்ற மகளையே தந்தை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.