பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை போக்சோவில் கைது

 

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை போக்சோவில் கைது

விழுப்புரம்

விழுப்புரத்தில் பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்து, 4 மாத கர்ப்பமாக்கிய தந்தையை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைதுசெய்தனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அடுத்த எடையூர் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி கலியமூர்த்தி. இவரது 14 வயது மகள், அதே பகுதியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா காரணமாக வீட்டில் இருந்து வரும் அந்த சிறுமிக்கு, அவரது தாயார் இல்லாத நேரத்தில் கலியமூர்த்தி பாலியல் தொல்லை அளித்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர் கர்ப்பமடைந்ததாக கூறப்படுகிறது.

பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய தந்தை போக்சோவில் கைது

மகளின் உடலில் மாற்றம் ஏற்பட்டதை அறிந்த சிறுமியின் தாயார், இதுகுறித்து விசாரித்துள்ளார். அப்போது, தந்தை கலியமூர்த்தி தனக்கு இழைத்த கொடுமையை சிறுமி தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் கலியமூர்த்தி மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைதுசெய்து, நீதிமன்ற காவலில் அடைத்தனர்.