அம்மாவை இழந்த மகள்… தந்தை, தாத்தா பாலியல் வன்கொடுமை… கர்ப்பமான 9ம் வகுப்பு மாணவி! ஒரத்தநாட்டில் நடந்த கொடுமை
அம்மாவை இழந்த மகளை தந்தையும், தாத்தாவும் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய கொடுமையான சம்பவம் ஒரத்தநாட்டில் நடந்துள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாட்டைச் சேர்ந்த இளங்கோவன். இவரது மனைவி 5 ஆண்டுகளுக்கு இறந்துவிட்டார். இவர்களுடைய 2 மகள்களும் சித்தி வீட்டில் வளர்ந்து வந்துள்ளனர். 9ம் வகுப்பு படித்து வந்த மூத்த மகள் அவரது தந்தையுடன் வந்து வசித்துள்ளார். இந்த நிலையில், தன்னுடைய மகளை, இளங்கோவன் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். தந்தையின் தொந்தரவை வெளியில் சொல்ல முடியாமல் சிறுமி தவித்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தனக்கு நேர்ந்த கொடுமையை அருகில் உள்ளவர்களிடம் தெரிவித்துள்ளார்.
அவர்கள், இளங்கோவைனை கடுமையாக எச்சரித்துள்ளனர். இதையடுத்து, சிறுமியை அவரது தாத்தா மாரிமுத்து வீட்டில் விட்டுள்ளனர். தாத்தாவும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனிடையே, சிறுமிக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அக்கம் பக்கத்தினர், சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். சிறுமியை பரிசோதனை செய்த டாக்டருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சிறுமி 5 மாத கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, சைல்டு லைன் அமைப்பினர் மூலம் வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது.
காவல்துறையினரிடம் சிறுமி அளித்த வாக்மூலத்தில், “எனது அம்மா 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் எனது தங்கச்சி இரண்டு பேரும் என்னுடைய சித்தி வீட்டில் வளர்ந்து வருகிறார்கள். நான் மட்டும் அம்மாவிடம் இருந்து வந்தேன். ஒரு நாள் அப்பா என்னிடம் தவறான நடக்க முயன்றார். நான் கடுமையான திட்டிவிட்டேன். சித்தியிடம் சொல்லிவிடுவேன் என்று கூறினேன். ஒரு நாள் என்னை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார். நான் கண்ணீர் விட்டு கதறி அழுதேன். என்னை சமாதானப்படுத்தினார். பின்னர் என்னை தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்தார். அடிக்கடி எனக்கு வலிறு வலிக்கும். ஒரு கட்டத்தில் அப்பாவின் தொந்தரவு அதிகமாகிவிட்டது. இதனால் அருகில் உள்ளவர்களிடம் நடந்ததை சொன்னேன். அவர்களை என்னை எனது தாத்தா வீட்டில் கொண்டு போய் விட்டார்கள். தாத்தாவும் என்னிடம் தவறான நடந்து கொண்டார்” என்று கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தாத்தா மாரிமுத்து, தந்தை இளங்கோவனை காவல்துறையினர், போக்ஸோ சட்டத்தின்கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற மகளையே தந்தை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியது அந்த பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.