திருப்பத்தூர் அருகே கிணற்றில் மூழ்கி தந்தை – மகன் பலி!

 

திருப்பத்தூர் அருகே கிணற்றில் மூழ்கி தந்தை – மகன் பலி!

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே கிணற்றில் நீச்சல் பழகியபோது நீரில் மூழ்கி தந்தை, மகன் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் காசிநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி. கூலி தொழிலாளி. இவரது மனைவி பவித்ரா. இவர்களுக்கு ஜெகதீஷ் (8) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். சென்னையில் தங்கி கூலி வேலை செய்துவந்த பாலாஜி நேற்று வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று அங்குள்ள விவசாய கிணற்றில் ஜெகதீசுக்கு, நீச்சல் கற்று கொடுத்து கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக ஜெகதீஷ் தண்ணீரில் மூழ்கினார். இதனால் சிறுவனை மீட்க பாலாஜி முயன்றபோது, அவரும் சேற்றில் சிக்கி நீரில் மூழ்கினார்.

திருப்பத்தூர் அருகே கிணற்றில் மூழ்கி தந்தை – மகன் பலி!

இதனை கண்டு அந்த பகுதி இளைஞர்கள், கிணற்றில் இறங்கி இருவரையும் மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை, பரிசோதித்த மருத்துவர் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து கந்திலி போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.