ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து : தந்தை, மகன் உயிரிழப்பு!

 

ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து : தந்தை, மகன் உயிரிழப்பு!

குடியாத்தம் அருகே ஆட்டோ மீது பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில், தந்தை மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தந்தை, மகனான சிவா மற்றும் சஞ்சய்(10) ஆட்டோவில் சென்று கொண்டிருந்துள்ளனர். ஆட்டோவுக்கு எதிரே வந்த அரசு பேருந்து, நிலை தடுமாறி ஆட்டோ மீது மோதியுள்ளது. இதில் ஆட்டோவில் இருந்து சிவாவும் சஞ்சய்யும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

ஆட்டோ மீது பேருந்து மோதி விபத்து : தந்தை, மகன் உயிரிழப்பு!

மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து அரசு பேருந்து ஓட்டுனரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.