ஜனவரி மாதம் முதல் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டாயம்!

 

ஜனவரி மாதம் முதல் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டாயம்!

ஜனவரி 2021, 1ம் தேதி முதல் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த காலதாமதமும் இன்றி டோல் வசூலிக்க ஃபாஸ்டேக் திட்டம் கொண்டுவரப்பட்டது. கடந்த 2019 டிசம்பர் 1-ம் தேதி முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர், டிசம்பர் 15-ம் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அப்போதும் கூட 60 சதவிகிதத்துக்கும் மேலான வாகனங்கள் ஃபாஸ்டேக் வாங்காததால் அந்த திட்டம் கடந்த ஜனவரி 15ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு ஃபாஸ்டேக் கட்டாயம் என்பது ஜனவரி  முதல் அமலானது.

ஜனவரி மாதம் முதல் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டாயம்!

இதனால், வாகன ஓட்டிகளுக்கு தடையற்ற பயணத்தை உறுதி செய்ய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் உத்தரவிட்டது. இதன்படி, வாகனங்கள் விரைவாக டோல்பூத்தை கடக்க டோல் பிளாசாவில் ஏற்படுத்தப்பட்ட வேகத்தடைகளை அகற்ற வேண்டும் என்றும், ஃபாஸ்டேக் ஒட்டிய வாகனங்கள் டோலில் நிற்காத வகையில் விரைவாக செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

ஜனவரி மாதம் முதல் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் கட்டாயம்!

இந்நிலையில் ஜனவரி 2021, 1ம் தேதி முதல் அனைத்து நான்கு சக்கர வாகனங்களுக்கும் ஃபாஸ்டேக் நடைமுறை கட்டாயமாக்கப்படுவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ” 2017 டிசம்பர் 1ம் தேதிக்கு முன்பாக விற்பனை செய்யப்பட்ட m&n பிரிவு நான்கு சக்கர வாகனங்களுக்கு 2021 ஜனவரி முதல் ஃபாஸ்டேக் அட்டை கட்டாயம். மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 இன் படி நான்கு சக்கர வாகன உற்பத்தியாளர்கள், டீலர்களிடம் புதிதாக நான்கு சக்கர வாகனங்களை பதிவு செய்யும் போதே ஃபாஸ்டேக் அளிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நான்கு சக்கர வாகனங்களுக்கான தகுதி சான்றிதழ் பெறும் போது கண்டிப்பாக ஃபாஸ்டேக் வைத்திருக்க வேண்டும். ஃபாஸ்டேக் வைத்துள்ள வாகனங்களுக்கு மட்டுமே தகுதி சான்று தரப்படும்” என்று குறிப்பிட்டுள்ளது.