நிர்வாண படமெடுத்து மிரட்டிய காதலன் -பேஷன் டிசைனர் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

 

நிர்வாண படமெடுத்து மிரட்டிய காதலன் -பேஷன் டிசைனர் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை


பேஷன் டிசைனர் பெண்ணை அவரின் காதலன் நிர்வாண படமெடுத்து கொடுமை செய்ததால் கைது செய்யப்பட்டார் .

நிர்வாண படமெடுத்து மிரட்டிய காதலன் -பேஷன் டிசைனர் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை


கேரளா மாநிலம் திரிசூரில் உள்ள புட்டெக்கராவைச் சேர்ந்த ஜோசப் ஒரு தொழிலதிபராக பணிபுரிகிறார்.இவர் கொச்சியில் உள்ள கடவந்திராவில் ஒரு பிளாட்டில் வசிக்கும் ஒரு பேஷன் டிசைனராக இருக்கும் ஒரு பெண்ணோடு திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்தார் .இந்நிலையில் அந்த ஜோசெப் அந்த பெண்ணிடம் ஐந்து லட்ச ரூபாய் பணத்தை அவரின் ஸ்டாக் மார்க்கெட்டில் முதலீடு செய்ய சொல்லி கேட்டார் .ஆனால் அதற்கு அந்த பெண் சம்மதிக்கவில்லை .பின்னர் அந்த பெண்ணை அவர் அடித்து உதைத்துள்ளார் .அதனால் அந்த பெண் அவர் கேட்ட பணத்தை கொடுத்தார் .ஆனால் அந்த பணம் ஸ்டாக் மார்க்கெட்டிலிருந்து திரும்ப வரவேயில்லை .
இந்நிலையில் அவர் மீண்டும் அந்த பெண்ணிடம் பணம் கேட்டுள்ளார் .மாதம் 40000 ரூபாய் வருமானம் கொடுப்பதாக கூறினார் .ஆனால் அந்த பெண் பணம் கொடுக்க மறுத்தார் .இதனால் கோவபட்ட ஜோசப் அந்த பெண் மீது மிளகாய் பொடி கலந்த சுடுநீரை ஊற்றியும் ,அவரை நிர்வாணமாக படமெடுத்தும் ,பலாத்காரம் செய்துள்ளார் . பிப்ரவரி 20 முதல் மார்ச் 8 வரை, அந்தப் பெண்ணை வீட்டிற்குள் அடைத்து வைத்து இந்த கொடுமையை செய்துள்ளார் .மேலும் அந்த ஆபாச படங்களை சமூக ஊடகத்தில் வெளியிடுவதாகவும் அவரின் பெற்றோருக்கு அனுப்புவதாகவும் மிரட்டியுள்ளார் .இந்த தகவல் சிலர் மூலம் போலீசுக்கு தெரிய வந்தது .அதனால் எர்ணாகுளம் போலீசார் அதிரடியாக அந்த பிளாட்டுக்குள் நுழைந்து, அந்த பெண்ணை காப்பற்றினார்கள் .பின்னர் ஜூன் 8ம் தேதி அந்த ஜோசப்பை கைது செய்தனர்.