வேளாண் சட்டங்களை கண்டித்து, திருச்சி அகில இந்திய வானொலி நிலையம் முன்பு விவசாயிகள் போராட்டம்

 

வேளாண் சட்டங்களை கண்டித்து, திருச்சி அகில இந்திய வானொலி நிலையம் முன்பு விவசாயிகள் போராட்டம்

திருச்சி

திருச்சியில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி அகில இந்திய வானொலி நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

வேளாண் சட்டங்களை கண்டித்து, திருச்சி அகில இந்திய வானொலி நிலையம் முன்பு விவசாயிகள் போராட்டம்

போராட்டத்தின்போது, டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வலியுறுத்தியும் அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். மேலும், போராடும் விவசாயிகளை இடைத்தரகள் என்று குற்றம்சாட்டுவதை கண்டிப்பதாக தெரிவித்த போராட்டக்காரர்கள், தமிழக விவசாயிகள் வேளாண் சட்டங்களை ஆதரிப்பதாக பொய் பிரச்சாரம் மேற்கொள்வதாகவும் குற்றம்சாட்டினார்.