ரூ.51 கோடி செலவில் விவசாயிகளின் குறைதீர்த்த ஓபிஎஸ் : நன்றி தெரிவித்த மக்கள்!

 

ரூ.51 கோடி செலவில் விவசாயிகளின் குறைதீர்த்த ஓபிஎஸ்  : நன்றி தெரிவித்த மக்கள்!

போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 12 கிராம மக்களின் தேவையை ஓபிஎஸ் தீர்த்து வைத்துள்ளார்.

ரூ.51 கோடி செலவில் விவசாயிகளின் குறைதீர்த்த ஓபிஎஸ்  : நன்றி தெரிவித்த மக்கள்!

போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 12 கிராமங்களான தம்பி நாயக்கன் பட்டி,டி.மீனாட்சி புரம்,ஏரணம்பட்டி, கோனாம்பட்டி,திம்மிநாயக்கன் பட்டி ,ஈ.புதுக்கோட்டை, பொட்டி புரம்,ராசிங்காபுரம்,சின்ன பொட்டி பரம், சிலைமலை, சில்லமரத்து பட்டி,தர்மத்து பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள நிலங்கள் அனைத்தும் மானாவரி விவசாயமாக இருந்து வந்தது. மழை வந்தால் தான் விளைச்சல் என்ற நிலையில் விவசாயிகள் அவதிப்பட்டு வந்தனர் .

ரூ.51 கோடி செலவில் விவசாயிகளின் குறைதீர்த்த ஓபிஎஸ்  : நன்றி தெரிவித்த மக்கள்!

இதையடுத்து இப்பகுதியை சேர்ந்த மக்கள் துணை முதல்வர் ஓபிஎஸ்-யிடம் 18 ஆம் கால்வாயை நீடித்து தந்து இப்பகுதியில் உள்ள சுமார் 6000 ஏக்கர் பரப்பளவில் உள்ள விவசாயிகள் நிலம் பயன் பெறலாம் என கோரிக்கை வைத்தனர். இதையடுத்து கோரிக்கையை ஏற்ற துணை முதல்வர் ஓபிஎஸ், கடந்த 2018 ஆம் ஆண்டு சுமார் 51 கோடி ரூபாய் செலவில் 18 ஆம் கால்வாயை நீடித்து கொடுத்துள்ளார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் இந்த பகுதிகளுக்கு சென்ற துணை முதல்வருக்கு இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.