அக்.27-இல் காணொலி மூலம் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் – ஆட்சியர்

 

அக்.27-இல் காணொலி மூலம் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் – ஆட்சியர்

ஈரோடு மாவட்ட விவசாயிகள் குறைதீர்ப்பு நாள் கூட்டம் வரும் 27ஆம் தேதி காணொலிகாட்சி மூலம் நடைபெறும் என்று மாவட்ட ஆட்சியர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

அக்.27-இல் காணொலி மூலம் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் – ஆட்சியர்

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஈரோடு மாவட்டத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம், வரும் 27ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.30மணிக்கு காணொலி மூலம் நடைபெற உள்ளதாகவும், இதில், விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள்,அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண் உதவி இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் ஈரோடு வேளாண் இணை
இயக்குநர் அலுவலகத்திலிருந்தும் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் கூட்டத்தில் கலந்துகொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,கோரிக்கைகளை மனுக்களாக எழுதி அந்தந்த வட்டாரத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அக்.27-இல் காணொலி மூலம் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் – ஆட்சியர்