“இந்தியன் வங்கி மேலாளர் இந்தியில் பேசுவதால் எதுவும் புரியவில்லை” : விவசாயிகள் போராட்டம்!

 

“இந்தியன் வங்கி மேலாளர் இந்தியில் பேசுவதால் எதுவும் புரியவில்லை” : விவசாயிகள் போராட்டம்!

வங்கி மேலாளர் இந்தியில் பேசுவதாக விவசாயிகள் புதுக்கோட்டையில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

“இந்தியன் வங்கி மேலாளர் இந்தியில் பேசுவதால் எதுவும் புரியவில்லை” : விவசாயிகள் போராட்டம்!

தமிழகத்தில் இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது. தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தி திணிக்கப்படுவதாக ஜிஎஸ்டி உதவி ஆணையர் பாலமுருகன் சமீபத்தில் குற்றச்சாட்டு ஒன்றை பொதுவெளியில் கூறி பரபரப்பை கிளப்பினார்.

“இந்தியன் வங்கி மேலாளர் இந்தியில் பேசுவதால் எதுவும் புரியவில்லை” : விவசாயிகள் போராட்டம்!

இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் குழிபிறையில் உள்ள இந்தியன் வங்கி மேலாளர் இந்தியில் பேசுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இந்தியில் பேசுவது புரியாததால் 10 மாதம் ஆகியும் கிசான் கார்டு பெற முடியவில்லை என கூறி வங்கி முன் விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.