வேலூர் அருகே நிலத் தகராறில் முதியவர் அடித்துக்கொலை – இருவர் கைது!

 

வேலூர் அருகே நிலத் தகராறில் முதியவர் அடித்துக்கொலை – இருவர் கைது!

வேலூர்

வேலூர் அருகே நிலத் தகராறில் முதியவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவத்தில், இருவரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் அடுத்த மேல் அரம்பட்டையை சேர்ந்தவர் ஈஸ்வரன் (70). விவசாயி. தீர்த்தமலை அடிவாரத்தில் இவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. இதன் அருகிலேயே, சுப்ரமணி என்பவரது நிலமும் உள்ளது. சுப்ரமணி, ஈஸ்வரனது நிலத்தை கடந்தே, தனது நிலத்திற்குள் கால்நடைகளை ஓட்டிச்செல்ல வேண்டும். இதனால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

வேலூர் அருகே நிலத் தகராறில் முதியவர் அடித்துக்கொலை – இருவர் கைது!

சம்பவத்தன்று சுப்ரமணியின் கால்நடைகள், ஈஸ்வரன் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த வாழையை சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ஈஸ்வரனும், அவரது மகன் வடிவேலும், சுப்ரமணியுடன் தகராறில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சுப்ரமணியின் மகன் வெங்கடேசன் மற்றும் அவரது உறவினர்கள் ஈஸ்வரனை கட்டையால் கடுமையாக தாக்கினர்.

இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த வேப்பங்குப்பம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும், இது குறித்து வழக்குப்பதிந்து, வெங்கடேசன், பாபு ஆகியோரை கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள 3 பேரை தேடி வருகின்றனர்.