சேலம் அருகே குடும்ப தகராறில் விவசாயி அடித்துக்கொலை!

 

சேலம் அருகே குடும்ப தகராறில் விவசாயி அடித்துக்கொலை!

சேலம்

மேட்டூர் அருகே ஆடுகளை நாய் கடித்ததை தட்டிக்கேட்ட விவசாயி உருட்டுக்கட்டையால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்த கல்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் பொம்ம நாயக்கர் (65). விவசாயி. இவரது அண்ணன் தம்ம நாயக்கர். இருவரும் அடுத்தடுத்த வீடுகளில் வசித்து வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு பொம்ம நாயக்கரின் வீட்டில் வளர்த்து ஆடுகளை, தம்ம நாயக்கரின் வளர்ப்பு நாய்கள் கடித்ததில், சில ஆடுகள் உயிரிழந்தன.

சேலம் அருகே குடும்ப தகராறில் விவசாயி அடித்துக்கொலை!

இதனால் ஆத்திரமடைந்த பொம்ம நாயக்கர், நேற்று தனது அண்ணன் வீட்டிற்கு சென்று நாய்களை கட்டிப்பட்டு வளர்க்கும் படி கண்டித்து உள்ளார். அப்போது, இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. அப்போது, தம்ம நாயக்கரின் மகன்கள் சக்திவேல், குமார் உள்ளிட்டோர் உருட்டு கட்டையால் தாக்கியதில் பொம்ம நாயக்கர் படுகாயமடைந்தார்.

அவரை, உறவினர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தகவல் அறிந்த மேச்சேரி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சக்திவேல், குமார் ஆகியோரை தேடி வருகின்றனர்.