இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் பாகிஸ்தான் அல்ல பிரதமர் மோடியே.. விவசாய சங்க தலைவர்

 

இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் பாகிஸ்தான் அல்ல பிரதமர் மோடியே.. விவசாய சங்க தலைவர்

இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் பாகிஸ்தான் அல்ல பிரதமர் மோடியே என்று விவசாயி சங்க தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் தெரிவித்தார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை திரும்ப பெறக்கோரியும் டெல்லியின் பல எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் 100 நாட்களை தாண்டி நடந்து கொண்டு இருக்கிறது. ஆனால் மத்திய அரசோ வேளாண் சட்டங்களில் திருத்தம் செய்ய தயார், அவற்றை திரும்ப பெற முடியாது என்று உறுதியாக கூறிவிட்டது. இதனையடுத்து விவசாயிகள் தங்களது போராட்டத்தை டிராக்டர் பேரணி, ரயில் மறியல், பந்த் உள்பட பல்வேறு வழிமுறைகளில் தீவிரப்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் பாகிஸ்தான் அல்ல பிரதமர் மோடியே.. விவசாய சங்க தலைவர்
பல்பீர் சிங் ராஜேவால்

தற்போது தங்களது எதிர்ப்பை வலுவாக காட்டும் நோக்கில், தற்போது தேர்தல் நடக்கும் மாநிலங்களுக்கு சென்று பா.ஜ.க.வுக்கு ஓட்டு போடாதீங்க என்று அம்மாநில மக்களிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். கொல்கத்தாவில் நடைபெற்ற மகாபஞ்சாயத்து கூட்டத்தில் விவசாயி சங்கங்கள் தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: மோடி அரசாங்கம் வாக்கு வங்கி அரசியலை மட்டுமே புரிந்து வைத்திருக்கிறது என்பதை நாம் இன்று உணர்ந்துள்ளோம். ஆகையால் நாம் அவர்களை தேர்தலில் தோற்கடிப்பது அவசியம்.

இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் பாகிஸ்தான் அல்ல பிரதமர் மோடியே.. விவசாய சங்க தலைவர்
ராகேஷ் டிக்கைட்

உங்கள் கைகளில் மிகப்பெரிய ஆயுதம். அது உங்கள் வாக்கு, உங்களிடம் வேண்டுகோள் விடுக்கிறேன், யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்க ஆனால் மோடிக்கு போடாதீங்க. இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் பாகிஸ்தான் அல்ல பிரதமர் மோடியே. இவ்வாறு அவர் பேசினார். பாரதிய கிஷான் யூனிய தலைவர் ராகேஷ் டிக்கைட் கூறுகையில், குறைந்தபட்ச ஆதரவு விலையில் பயிர்கள் வாங்கப்படவில்லை என்பதை விவசாயிகளிடம் சொல்ல நாங்கள் நந்திகிராம் செல்கிறோம். பா.ஜ.க. முழு நாட்டையும் கொள்ளையடித்ததால் அவர்களுக்கு வாக்கு அளிக்காதீங்க என்று அவர்களிடம் வேண்டுகோள் விடுப்போம் என்று தெரிவித்தார்.