“கட்டிலுக்கு வந்து தொட்டில் கட்டிட்டியே” -சண்டை போட்ட சின்னவீட்டை சிதைத்த வாலிபர்

 

“கட்டிலுக்கு வந்து தொட்டில் கட்டிட்டியே” -சண்டை போட்ட சின்னவீட்டை சிதைத்த வாலிபர்

ஒருவர் தன்னுடைய சின்னவீட்டு பெண்னோடு தாலியே கட்டாமல் குழந்தையும் பெற்றதால், கோபமுற்று தாலி கட்ட சொன்ன பெண்ணை கொலை செய்துள்ளது அந்த பகுதியில் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் ஆதர்ஷ் காலனியில் வசிக்கும் பிரியா சவான் (20) என்ற பெண் , அவரது சகோதரி ரேஷ்மா சவான் (24) உடன் வசித்து வந்துள்ளார் .அப்போது அவருக்கும் அந்த பகுதியில் இருக்கும் கெய்க்வாட் என்ற நபருக்கும் கள்ள உறவு ஏற்பட்டது .கெய்க்வாடுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் உள்ளது .இந்நிலையில் அவரோடு இந்த பெண், சின்ன வீடாக வாழ்ந்து ஒரு குழந்தையும் பெற்றுள்ளார் .இதனால் அந்த பெண் அடிக்கடி அவரிடம் தாலி கட்டி தன்னை மனைவியாக ஊரறிய வாழுமாறு வற்புறுத்திள்ளார் .


இதன் விளைவாக கடந்த வாரம் ஒரு நாள் அந்த பெண் அவரின் வீட்டுக்கு சென்று அவரின் மனைவி முன்னாடியே தன்னை ஊரறிய ஏற்றுக்கொள்ளமாறு சண்டை போட்டுள்ளார் .இதனால் கோபமுற்ற கெய்க்வாட் அந்த பெண்ணை அன்றிரவு ஒரு மறைவான இடத்துக்குவரச்சொல்லி அவரை கொலை செய்து விட்டு ஓடிவிட்டார் .இரண்டு நாளாக தன்னுடைய சகோதரியை காணாததால் அவரின் அக்கா அங்குள்ள காவல் நிலையத்தில் புகாரளித்தார் .போலீசார் நடத்திய விசாரணையில் கள்ள காதல் விவகாரத்தில் அந்த பெண்ணை கொன்ற அவரின் காதலன் கெய்க்வாட்டை கைது செய்துள்ளார்கள்.

“கட்டிலுக்கு வந்து தொட்டில் கட்டிட்டியே” -சண்டை போட்ட சின்னவீட்டை சிதைத்த வாலிபர்