இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி பலி!

 

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி பலி!

திருவாரூர்

திருவாரூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அடுத்த ஆதனூர் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் அருள்செல்வம். விவசாயி. இவருக்கு திருமணமாகி சித்ரா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில். அருள்செல்வம் இன்று திருவாரூர் சென்றுவிட்டு இருசக்கர வாகத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் விவசாயி பலி!

கொரடாச்சேரி அருகே சென்று கொண்டிருந்த போது அருள் செல்வத்தின் வாகனம் மீது எதிரே வந்த லாரி மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காமல் அருள்செல்வம் உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவல் அறிந்த கொரடாச்சேரி போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, திருவாரூரை சேர்ந்த லாரி ஓட்டுநர் முத்துக்குமரவேலை கைதுசெய்து செய்தனர்.