பைக் மீது, கர்நாடக அரசுப்பேருந்து மோதியதில் விவசாயி பலி!

 

பைக் மீது, கர்நாடக அரசுப்பேருந்து மோதியதில் விவசாயி பலி!

ஈரோடு

சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது, கர்நாடக அரசுப்பேருந்து மோதிய விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த கொங்கள்ளி காலனி பகுதியை சேர்ந்தவர் விவசாயி சித்தராஜ். இவர் தாளவாடி மலையில் உள்ள பனஹள்ளி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவருடன் கொங்கள்ளி காலனியை சேர்ந்த தேவன் என்பவரும் உடன் சென்றார்.

பைக் மீது, கர்நாடக அரசுப்பேருந்து மோதியதில் விவசாயி பலி!

தாளவாடி அடுத்த ஆனந்தபுரம் அருகே சென்றபோது சித்தராஜின் வாகனத்தின் மீது, சாம்ராஜ்நகரில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்ற கர்நாடக அரசுப் பேருந்து மோதியது. இதில், சாலையில் தூக்கிவீசப்பட்ட சித்தராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தேவனுக்கு, லேசான காயம் ஏற்பட்டது.

தகவல் அறிந்த தாளவாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த தேவனை மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய பேருந்து ஓட்டுநரை தேடி வருகின்றனர்.