ஆண்டிபட்டி அருகே விவசாயி வெட்டிக் கொலை… தேனி எஸ்.பி., நேரில் விசாரணை…

 

ஆண்டிபட்டி அருகே விவசாயி வெட்டிக் கொலை…  தேனி எஸ்.பி., நேரில் விசாரணை…

தேனி

ஆண்டிபட்டி அருகே விவசாயி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அடுத்த பாலகோம்பை பகுதியை சேர்ந்தவர் வெள்ளை துரை(40). இவருக்கு வள்ளி (35) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். வள்ளி தேனியில் உள்ள நூற்பாலையில் பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வள்ளியை, அவர் பேருந்தில் ஏற்றிவிட்டு உள்ளார்.

பணி முடிந்து நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது, வெள்ளைத் துரையை காணவில்லை என கூறப்படுகிறது. இதனால் பல்வேறு இடங்களிலும் தேடிப்பார்த்த வள்ளி, அவர் கிடைக்காததால் ராஜதானி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் தேடி வந்த நிலையில், பாலக்கோம்பை பகுதியில் உள்ள ஓடையில் வெள்ளைத்துரை வெட்டி கொல்லப்பட்டு சடலமாக கிடந்தார்.

ஆண்டிபட்டி அருகே விவசாயி வெட்டிக் கொலை…  தேனி எஸ்.பி., நேரில் விசாரணை…

தகவல் அறிந்த தேனி மாவட்ட எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு, விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ராஜதானி போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.