மகனுக்கு நீச்சல் கற்பித்த விவசாயி, கிணற்றில் மூழ்கி பலி!

 

மகனுக்கு நீச்சல் கற்பித்த விவசாயி, கிணற்றில் மூழ்கி பலி!

கோவை

கோவை அருகே மகனுக்கு நீச்சல் பயிற்சி அளித்த விவசாயி, எதிர்பாராத விதமாக கிணற்றில் மூழ்கி உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த செம்மாண்டம்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (44). விவசாயி. இவருக்கு ரம்யா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவர் நேற்று தனது விவசாய தோட்டத்தில், பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவரது மகன் நீச்சல் கற்றுக் கொடுக்க கூறியுள்ளார்.

மகனுக்கு நீச்சல் கற்பித்த விவசாயி, கிணற்றில் மூழ்கி பலி!

இதனை அடுத்து, தோட்டத்தில் உள்ள கிணற்றில் மகனுக்கு நீச்சல் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக செந்தில்குமார் நீரில் மூழ்கினார். இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவன் கூச்சலிடவே, அருகில் இருந்தவர்கள் கிணற்றில் இறங்கி, செந்தில்குமாரை தேடினர். அப்போது, உயிரிழந்த நிலையில் செந்தில்குமார் சடலமாக மீட்கப்பட்டார்.

தகவல் அறிந்த கருமத்தம்பட்டி போலீசார், உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பினர். மேலும், இதுகுறித்து செந்தில்குமார் மனைவி ரம்யா அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரித்து வருகின்றனர்.