சத்தியமங்கலம் அருகே சாலை விபத்தில் விவசாயி பலி!

 

சத்தியமங்கலம் அருகே சாலை விபத்தில் விவசாயி பலி!

ஈரோடு

சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது மினி டெம்போ மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்தவர் கார்த்திக். விவசாயி. இவர் நேற்று சத்தியமங்கலத்திற்கு சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் பெருந்துறைக்கு திரும்பி கொண்டிருந்தார். அரியப்பாளையம் அருகே உள்ள எருமப்பள்ளம் பகுதியில் சென்றபோது எதிரே ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்ற டேம்போ வேன் எதிர்பாராத விதமாக கார்த்திக்கின் வாகனத்தின் மீது மோதிவிட்டு சாலையில் கவிழ்ந்தது .

சத்தியமங்கலம் அருகே சாலை விபத்தில் விவசாயி பலி!

இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட கார்த்திக் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். டெம்பே ஓட்டுநர் சிவகுமார் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்த சத்தியமங்கலம் போலீசார் விரைந்து சென்று காயமடைந்த சிவகுமாரை மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், கார்த்திக்கின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைதத்னர். தொடர்ந்து, இந்த விபத்து குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.