‘என்னை மன்னித்து விடு மித்ரா’ : பயிர்கள் வீணானதால் விவசாயி எடுத்த விபரீத முடிவு!

 

‘என்னை மன்னித்து விடு மித்ரா’ : பயிர்கள் வீணானதால் விவசாயி எடுத்த விபரீத முடிவு!

தூத்துக்குடி அருகே பயிர் வீணானதால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இருக்கும் பிள்ளையார் நத்தம் கிராமத்தில் வசித்து வந்த நாராயணசாமி. இவர் தனது மனைவியுடன், மகளின் வீட்டில் வசித்து வந்திருக்கிறார். ராஜபாளையத்தில் இருக்கும் மில் ஒன்றில் பணியாற்றி வந்த இவர், 2 ஆண்டுகளுக்கு முன்னர் தனது 5 ஏக்கர் நிலத்தில் மக்காச்சோளம், உளுந்து ஆகிய பயிர்களை பயிர் செய்து வந்திருக்கிறார். அவை அனைத்தும் பூச்சியால் அரித்து பாதிப்புக்குள்ளாகியது.

‘என்னை மன்னித்து விடு மித்ரா’ : பயிர்கள் வீணானதால் விவசாயி எடுத்த விபரீத முடிவு!

இன்று காலை தனது நிலத்திற்கு சென்ற நாராயணசாமி, வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால் குழப்பமடைந்த உறவினர்கள் வயலுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது நாராயணசாமி, அங்கிருக்கும் மரம் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளார். அதிர்ச்சி அடைந்த உறவினர்கள், அவரது உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னர், ஈர மண்ணை எடுத்து “என்னை மன்னித்து விடு மித்ரா” என்று எழுதி வைத்திருக்கிறார். தனது பேத்தி மித்ரா மீது மிகுந்த பாசம் கொண்ட நாராயணசாமி, இவ்வாறு எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்டது காண்போரை கலங்கச் செய்துள்ளது.