பட்டுக்கோட்டை அருகே கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை!

 

பட்டுக்கோட்டை அருகே கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை!

தஞ்சாவூர்

பட்டுகோட்டை அருகே கடன் தொல்லையால் விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது,

தஞ்சை மாவட்டம் மதுக்கூர் ஒன்றியம் பெரியகோட்டை வெட்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன். விவசாயி. இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு மகாலட்சுமி (8), தனலட்சுமி(7) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், சுப்பிரமணியன், குடும்ப செலவிற்காக அதே பகுதியை சேர்ந்த பாலசுந்தமணி, வளர்மதி ஆகியோரிடம் ரூ.11 ஆயிரம் கடன் பெற்றிருந்ததாக கூறப்படுகிறது.

பட்டுக்கோட்டை அருகே கடன் தொல்லையால் விவசாயி தற்கொலை!

கடன் தொகையை வசூலிக்கும் பொறுப்பை அதே பகுதியை சேர்ந்த பூமிநாதன் என்பவர் செய்து வந்துள்ளார். அவர், வட்டியுடன் சேர்த்து மொத்தம் ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும் என சுப்பிரமணியனை மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், கடனை திருப்பி செலுத்தக் கூறி சுப்பிரமணியன், அவரது மனைவி சுமதியை கிராமத்தினர் முன்னிலையில் அவமரியாதை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட சுப்பிரமணி நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த மதுக்கூர் போலீசார் சுப்ரமணியத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பட்டுகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.