இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி பலி!

 

இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி பலி!

கோவை

பொள்ளாச்சி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி விழுந்த கூலி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வெள்ளாளபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மகுடேஸ்வரன் (29). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கடைக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். பெரியார் நகர் அருகே சென்றபோது திடீரென வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி சாலையில் விழுந்தார்.

இருசக்கர வாகன விபத்தில் தொழிலாளி பலி!

இதில், அவர் தலையில் பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து நெகமம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.