திருச்சியில் முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடி வெட்டிக்கொலை!

 

திருச்சியில் முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடி வெட்டிக்கொலை!

திருச்சி

திருச்சியில் முன்விரோதம் காரணமாக ரவுடி வெட்டிகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி அரியமங்கலம் திடீர் நகரை சேர்ந்தவர் பன்னி பெரியசாமி. இவரது சகோதரர் கேபிள் சேகர். தொழில் போட்டி காரணமாக இருவரது குடும்பங்களுக்கும் இடையே நீண்ட காலமாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் கேபிள் சேகரை, அவரது வீட்டின் அருகேவைத்து பன்னி பெரியசாமியின் உறவினர்கள் வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கில், பெரியசாமியின் மகன் சிலம்பரசன் உள்ளிட்ட 11 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

திருச்சியில் முன்விரோதம் காரணமாக பிரபல ரவுடி வெட்டிக்கொலை!

வழக்கில் பிணையில் வெளியே வந்திருந்த சிலம்பரசன், நேற்றிரவு அவரது வீட்டின் பின்புறமுள்ள காட்டுப்பகுதிக்கு சென்றபோது, அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டிப்படுகொலை செய்துவிட்டு தப்பியோடினர்.

தகவல் அறிந்த அரியமங்கலம் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.