ஆம்புலன்ஸ் டிரைவராக மாறிய பிரபல நடிகர்!

 

ஆம்புலன்ஸ் டிரைவராக மாறிய பிரபல நடிகர்!

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஓட்டி வருகிறார் கன்னட நடிகர் அர்ஜுன் கௌடா .

ஆம்புலன்ஸ் டிரைவராக மாறிய பிரபல நடிகர்!

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல் மக்கள் அல்லாடி வருகின்றனர். அதே சமயத்தில் உரிய நேரத்தில் சிகிச்சைகள் கிடைக்காததால் பலர் தங்கள் உயிரை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது . இருப்பினும் இந்த சூழலிலும் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர்.

ஆம்புலன்ஸ் டிரைவராக மாறிய பிரபல நடிகர்!

இந்நிலையில் கன்னட நடிகர் அர்ஜுன் கௌடா களப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ளார். ப்ராஜக்ட் ஸ்மைல் என்ற அமைப்பை உருவாக்கியுள்ள அவர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆம்புலன்ஸ் மூலம் சேவையாற்றி வருகிறார் . அவரே ஆம்புலன்சை ஓட்டி சென்று நோயாளிகளை மருத்துவமனைக்கு செல்கிறார். அத்துடன் கொரோனாவால் இறப்பவர்களின் உடல்களை இறுதிச்சடங்கு நடக்கும் இடத்திற்கு முன் வாகனத்தில் எடுத்துச் செல்கிறார்.நிலைமை சரியாகும் வரை ஆம்புலன்ஸ் சேவையை தொடர விரும்புவதாக தெரிவித்துள்ள இவர், தேவைப்படுபவர்களுக்கு ஆக்சிஜன் டெலிவரி செய்யவும் தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார். அர்ஜுன் கௌடாவின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இவர் யுவரத்னா, ரஷ்டம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.