நில தகராறில் குடும்பம் ஒதுக்கிவைப்பு; பாதிக்கப்பட்டோருடன் கிராம மக்கள் சாலை மறியல்

 

நில தகராறில் குடும்பம்  ஒதுக்கிவைப்பு; பாதிக்கப்பட்டோருடன் கிராம மக்கள் சாலை மறியல்

திருப்பத்தூர்

ஆம்பூர் அருகே நிலத் தகராறில் குடும்பத்தினரை ஊரை விட்டு ஒதுக்கிவைத்த சம்பவத்தை கண்டித்து பாதிக்கப்பட்டவர்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடசேரி பகுதியை சேர்ந்தவர் ஹரி. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு நபருக்கும் நிலத் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக, ஹரியின் குடும்பத்தினரை, கிராம பஞ்சாயத்தினர் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளனர்.

நில தகராறில் குடும்பம்  ஒதுக்கிவைப்பு; பாதிக்கப்பட்டோருடன் கிராம மக்கள் சாலை மறியல்

மேலும், அவர்களுடன் கிராம மக்கள் தொடர்பு வைத்துகொள்ளக் கூடாது என்று வீடு வீடாக சென்று கூறியுள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் உமராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்காததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்த கிராம மக்கள் போலீசாரை கண்டித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.