“கல்யாணமாகி 60 நாட்களில் குழந்தை பிறந்து விடுமா?” அமைச்சர் ஐ.பெரியசாமி கேள்வி!

 

“கல்யாணமாகி 60 நாட்களில் குழந்தை பிறந்து விடுமா?” அமைச்சர் ஐ.பெரியசாமி கேள்வி!

தமிழகத்தில் குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

“கல்யாணமாகி 60 நாட்களில் குழந்தை பிறந்து விடுமா?” அமைச்சர் ஐ.பெரியசாமி கேள்வி!

கடந்த மே 7-ஆம் தேதி தமிழக முதல்வராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டார். இதன் பிறகு ஒவ்வொரு துறையிலும் அமைச்சர்கள் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக சுகாதாரத்துறை ஒரு காலகட்டத்தில் மிக தீவிரமாக இயங்கி வருகிறது. திமுக தேர்தலின்போது வாக்குறுதிகளாக நீட் தேர்வு ரத்து, நகை கடன் தள்ளுபடி குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 ஊக்கத்தொகை என பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தது. ஆனால் விடியல் தருவதாக மக்களிடம் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றுகோரி அதிமுக நேற்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.

“கல்யாணமாகி 60 நாட்களில் குழந்தை பிறந்து விடுமா?” அமைச்சர் ஐ.பெரியசாமி கேள்வி!

இந்நிலையில் சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமியிடம் நகைக்கடன் தள்ளுபடி குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “கல்யாணமாகி 60 நாட்களில் குழந்தை பிறந்து விடுமா? நகை கடன்கள் நிச்சயம் தள்ளுபடி செய்யப்படும். குடும்ப அட்டை இல்லாதவர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு சங்க தேர்தல் சட்ட வல்லுனர்களுடன் கலந்து பேசி விரைவில் நடத்தப்படும்” என்றார்.