உயிரிழந்த 36 தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி!

 

உயிரிழந்த 36 தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி!

உயிரிழந்த 36 தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிவாரணம் அறிவித்துள்ளார்.

உயிரிழந்த 36 தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி!

தமிழக அரசின் முதல்வர் பொதுநிவாரண நிதியிலிருந்து உயிரிழந்த காவலர்கள் குடும்பத்திற்கு முதல்வர் பழனிசாமி நிதியுதவி அறிவித்து வருகிறார். முதற்கட்டமாக சென்னை, மயிலாதுறை, அரியலூர், சிவகங்கை என தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்களில் உடல்நலக் குறைவு மற்றும் விபத்துகளில் உயிரிழந்த 57 காவலர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 64 மற்றும் 57 காவலர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

உயிரிழந்த 36 தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு ரூ. 3 லட்சம் நிதியுதவி!

இந்நிலையில் விபத்து மற்றும் உடல்நலக்குறைவால் உயிரிழந்த 36 தீயணைப்பு வீரர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதியுதவி அறிவித்துள்ளார். இறந்த தீயணைப்பாளர்கள் மற்றும் நிலைய அலுவலர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் பழனிசாமி ரூ. 3 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.