போதை மாத்திரை வாங்கி தர மறுத்த கள்ளக்காதலன்… உயிரை மாய்த்துக்கொண்ட பெண் தொழிலாளி…

 

போதை மாத்திரை வாங்கி தர மறுத்த கள்ளக்காதலன்… உயிரை மாய்த்துக்கொண்ட பெண் தொழிலாளி…

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே கள்ளக்காதலன் போதை மாத்திரை வாங்கி தர மறுத்ததால், இளம்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் ஹவுசிங்போர்டு அடுத்த சுந்தரம் நகரை சேர்ந்தவர் தியாகு(36). இவர் திருப்பத்தூர் பகுதியில் கழிவறைகளை சுத்தம் செய்யும் பணி செய்து வருகிறார். கடந்த 13 ஆண்டுகளுக்கு, இவரிடம் வேலைபார்த்த வேலாயுதம் என்பவரது மனைவி புவனேஸ்வரி (35) உடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனை அறிந்த வேலாயுதம் பிரிந்து சென்றதால், புவனேஸ்வரியுடன் தியாகு வாழ்ந்து வந்துள்ளார்.

போதை மாத்திரை வாங்கி தர மறுத்த கள்ளக்காதலன்… உயிரை மாய்த்துக்கொண்ட பெண் தொழிலாளி…

இந்த நிலையில் ஒவ்வாமை பிரச்சினை காரணமாக இருவரும் அடிக்கடி போதை மாத்திரைகளை பயன்படுத்தி வந்துள்ளனர். போதை தலைக்கேறிய பின்னர் இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் போதை பழக்கத்தை கைவிட முடிவுசெய்த தியாகு, அதற்காக மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்து புவனேஸ்வரி தொடர்ந்து போதை மாத்திரைகளை பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், புவனேஸ்வரிக்கு போதை மாத்திரைகளை வாங்கி கொடுப்பதை தியாகு நிறுத்தியுள்ளார். அதனை மீறி தாமாகவே மருந்துகளை வாங்கியதால், புவனேஸ்வரிக்கு பணம் கொடுக்க மறுத்ததாக கூறப்பகிறது.

போதை மாத்திரை வாங்கி தர மறுத்த கள்ளக்காதலன்… உயிரை மாய்த்துக்கொண்ட பெண் தொழிலாளி…

இதனால் போதை மருந்து வாங்க முடியாமல் தவித்த புவனேஸ்வரி வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த திருப்பத்தூர் தாலுகா போலீசார் விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் . மேலும், தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பவு செய்து தியாகுவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.