கள்ளக்காதலர்கள்தான் டார்கெட்! போலீஸ் என மிரட்டி 50 பெண்களை கதறவிட்ட டிக்கிமணி!

 

கள்ளக்காதலர்கள்தான் டார்கெட்! போலீஸ் என மிரட்டி 50 பெண்களை கதறவிட்ட டிக்கிமணி!

பூங்காக்கள் மற்றும் ஓட்டல், திரையரங்குகளுக்கு வரும் கள்ளக்காதல் ஜோடிகளை குறிவைத்து, அவர்களிடம் போலீஸ் என மிரட்டி, கடந்த 4 வருடங்களில் 50 பெண்களை பலாத்காரம் செய்த இளைஞர் டிக்கிமணி சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

சென்னை அடுத்த மணலி காவல்நிலையத்தில், தனது கைப்பை திருடு போய்விட்டதாகவும், அதில் 15 ஆயிரம் பணமும், செல்போனும் இருந்ததாகவும் புகார் கொடுத்தார் பெண்ணின் மீது போலீசாருக்கு சந்தேகம் வந்தது. எங்கே திருடு போனது? எதற்கு அங்கே சென்றீர்கள்? என்று போலீசார் துருவித்துருவி விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டுவிட்டார் அந்தப்பெண்.

கள்ளக்காதலர்கள்தான் டார்கெட்! போலீஸ் என மிரட்டி 50 பெண்களை கதறவிட்ட டிக்கிமணி!

’’கள்ளக்காதலருடன் மாதவரம் பூங்காவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தேன். அங்கே வந்த ஒரு இளைஞர், திடீரென்று எங்களை போட்டோ எடுத்தார். இதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவும், போலீஸ் என்கிட்டயே உங்க வேலையை காட்டுறீங்களா என்று அதட்டியதும், நிஜ போலீஸ் என்று பயந்துவிட்டோம். இந்த போட்டோவை உங்க வீட்டில் காட்டினால் என்னவாகும் தெரியுமா? என்று தொடர்ந்து என்னை மிரட்டி, என்கூட வந்தவரையும் விரட்டியடித்துவிட்டு, என்னை அழைத்துச்சென்று பலாத்காரம் செய்தான். போகும்போது என் கைப்பையில் இருந்த 15 ஆயிரம் பணத்தையும், செல்போனையும் எடுத்துப்போயிட்டான். வீட்டில் உள்ளவர்களை சமாளிப்பதற்காகத்தான் திருடு போய்விட்டதாக புகார் கொடுக்க வந்தேன்’’என்று கூறியதை அடுத்து, போலீஸ் பெயரில் இப்படி மோசடியில் ஈடுபடும் நபர் ஆபத்தானவர் என்பதை உணர்ந்த மாதவரம் சரக துணை ஆணையர் பாலகிருஷ்ணன், அந்த போலி போலீசை பிடிக்க தனிப்படை அமைத்தார்.

மணலியைச்சேர்ந்த அந்த பெண் சொன்ன அடையாளங்களை வைத்து தீவிர தேடுதலில் ஈடுபட்டனர். மாதவரம் பகுதியில் பைக்கில் சுற்றிக்கொண்டிருந்த ஒரு இளைஞரை சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரித்தபோது, தண்டையார் பேட்டையை சேர்ந்த டிக்கிமணி(33) என்று முதலில் தெரியவந்தது. அவரிடம் விசாரித்ததில், போலீசார் போல் நடித்து ஏமாற்றி வருவது தெரியவந்தது. இதையடுத்து, துணை ஆணையர் பாலகிருஷ்ணனுக்கு தகவல் சொல்ல, அவர் வந்து மணலி பெண் சொன்ன அடையாளங்களை வைத்து பார்த்து, அந்த பெண்ணிடம் நடந்த மோசடி பற்றி சொன்னதும், அது தான் தான் என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

கள்ளக்காதலர்கள்தான் டார்கெட்! போலீஸ் என மிரட்டி 50 பெண்களை கதறவிட்ட டிக்கிமணி!

டிக்கிமணியை துருவித்துருவி விசாரித்ததில், செங்குன்றம், புழல், மாதவரம் பகுதிகளில் நடமாடும் காதலர்கள், கள்ளக்காதலர்களை போலீஸ் என்று சொல்லி மிரட்டி பெண்களுடன் வருபவர்களை விரட்டிவிட்டு, அப்பெண்களை பலாத்காரம் செய்ததும், அவர்களிடம் இருந்து பணம் பறித்ததையும் ஒப்புக்கொண்டுள்ளார். கடந்த நான்கு வருடங்களில் இப்படி 50 பெண்களை அனுபவித்திருக்கிறேன் என்று சொன்னதை கேட்டு போலீசார் திடுக்கிட்டனர்.

டிக்கிமணியின் வாக்குமூலத்தின்படி அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

கள்ளக்காதலர்கள்தான் டார்கெட்! போலீஸ் என மிரட்டி 50 பெண்களை கதறவிட்ட டிக்கிமணி!

ரகசிய உறவு வெளியே தெரிந்துவிடும் என்பதால்தான் 50 பெண்களும் இவனைப்பற்றி புகார் கொடுக்காமல் இருந்திருக்கிறார்கள். நல்லவேளை, மணலி பெண்ணாவது இவனுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறாரே என்கிறார்கள் போலீசார்.